நடிகர் ரஜினிகாந்த் கூலி படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்கு முன் சில வாரங்கள் ஓய்வெடுக்க உள்ளதாகத் தகவல்.
'கூலி' படப்பிடிப்பில் பங்கேற்று வந்த ரஜினிகாந்த், கடந்த வாரம் சென்னை திரும்பிய நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் செப். 30 ஆம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவப் பரிசோதனையில், ரஜினியின் இதயத்திலிருந்து வரும் முக்கிய தமனி எனும் ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதனை சரி செய்ய ரத்த நாளத்தில் ஸ்டென்ட் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சத்யராஜ் பிறந்தநாள்:லோகேஷ் கனகராஜ் வாழ்த்து!
தற்போது, உடல்நிலை சீராக இருப்பதால் நாளை (அக்.3) மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் எனத் தெரிகிறது.
மருத்துவர்கள் ஆலோசனைகளின்படி சில வாரங்கள் ஓய்வெடுத்த பின்பே கூலி படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதுவரை, ரஜினி இல்லாத காட்சிகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: ரஜினி டிஸ்சார்ஜ் எப்போது?