Tuesday, October 22, 2024

திருச்செந்தூர் – நெல்லை பயணிகள் ரெயில் 5 நாட்கள் ரத்து

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

தண்டவாளம் புதுப்பிக்கும் பணி காரணமாக திருச்செந்தூர் – நெல்லை பயணிகள் ரெயில் 5 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்செந்தூர்-நெல்லை இடையே தினமும் பயணிகள் ரெயில் (வண்டி எண் 06674/06409) இயக்கப்பட்டு வருகிறது. நெல்லையில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி காரணமாக இந்த ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 8-ந் தேதி வரை 5 நாட்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதே போன்று திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு தினமும் இரவு 8.25 மணிக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சி மண்டலத்தில் ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 6, 8, 10-ந் தேதிகளில் இரவு 8.25 மணிக்கு பதிலாக இரவு 10.35 மணிக்கு புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024