ஈரானின் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும்: டிரம்ப் பேச்சு

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

நியூயார்க்,

இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தி ஓராண்டை நெருங்கி வரும் சூழலில், இஸ்ரேலும் தொடர்ந்து காசாவை இலக்காக கொண்டு போரில் ஈடுபட்டு வருகிறது. இதில், 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் உயிரிழந்து உள்ளனர். இந்த சூழலில், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டு வருகிறது.

லெபனானில் இருந்தபடி இஸ்ரேலை இலக்காக கொண்டு தாக்குதலை தொடுத்து வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதில் அந்த அமைப்பின் பல முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். இந்த சூழலில்,

நடத்திய பதிலடி தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர், ஹிஸ்புல்லா அமைப்பின் தடுப்பு காவல் பிரிவின் தளபதி நபில் குவாவக் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் மீது ஈரானும் தாக்குதலை தொடுத்தது. இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காக கொண்டு 200-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை ஈரானிய அரசு வீசி தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், இஸ்ரேலின் 2 ராணுவ தளங்களை இலக்காக கொண்டும் ஈரான் தாக்குதல் நடத்தியது. நிவேதிம் விமான தளம், நெட்ஜரிம் ராணுவ தளம் மற்றும் டெல் நாப் உளவு பிரிவு ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், அவற்றில் பல ஏவுகணைகளை வழியிலேயே தடுத்து, அழித்து விட்டோம் என இஸ்ரேல் கூறியது. ஆபரேசன் ட்ரூ பிராமிஸ் 2 என்ற பெயரில் ஈரான் நடத்திய இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்து உள்ளார். ஈரான் பெரும் தவறை செய்து விட்டது. அதற்கான விலையை அந்நாடு கொடுக்க வேண்டி இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இதனால், மத்திய கிழக்கு பகுதியில் தொடர்ந்து பதற்ற நிலை நீடித்து வருகிறது. ஈரான் தாக்குதல் நடந்து 2 நாட்கள் கடந்து விட்ட நிலையில், பதிலடி கொடுப்பதில் இஸ்ரேல் தயக்கம் காட்டி வருகிறது. லெபனானை இலக்காக கொண்டே இஸ்ரேல் படை தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பதற்ற நிலை அதிகரித்து காணப்படும் சூழலில், மத்திய கிழக்கு பகுதியில் போர் தவிர்க்கப்பட வேண்டும் என ஜோ பைடன் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார். போர் நடக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. அதனை நாம் தவிர்த்து விட முடியும் என நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த சூழலில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப் கூறும்போது, பைடனிடம் இஸ்ரேலுக்கு உதவ அமெரிக்க படைகளை அனுப்புவீர்களா? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பைடன், நாங்கள் ஏற்கனவே இஸ்ரேலுக்கு உதவிவிட்டோம். இஸ்ரேலை நாங்கள் பாதுகாக்க போகிறோம் என்றார்.

அவரிடம் ஈரானை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஈரானை தாக்குவீர்களா? என கேட்கப்பட்டது. அதற்கு பைடன், அவர்கள் அணு சக்தி கட்டமைப்பை தாக்காதவரை இல்லை என பதிலளிக்கிறார். அப்படியென்றால், நீங்கள் (பைடன்) அவற்றை தாக்க விரும்புகிறீர்கள், சரியா? என டிரம்ப் கேட்டுள்ளார்.

ஈரானின் அணு சக்தி தளங்களை தாக்குங்கள் என இஸ்ரேலிடம் பைடன் கேட்டிருக்க வேண்டும் என கூறிய டிரம்ப், அதன்பின்பு வருகிற எல்லாவற்றையும் பற்றி பின்னர் பார்த்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து பேசிய டிரம்ப், ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும் என குறிப்பிட்டார். ஆனால், அவர்களின் (பைடன்) திட்டம் என்ன? என்பது பற்றி நாங்கள் கண்டறிவோம் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். இதனால், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள டிரம்ப், வெற்றி பெற்று ஆட்சியதிகாரத்திற்கு வந்து விட்டால், ஈரானுக்கு எதிராக கடுமையான தாக்குதல் நடத்த கூடும் என பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024