1
முன்னணி தகவல் தொழில்நுட்ப சாதனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள், முதல்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தனது ஐ-போன் 16 வரிசை அறிதிறன் பேசிகளை இந்தியாவில் நடப்பு மாதத்துக்குள் அறிமுகப்படுத்தவிருப்பதாக அறிவித்துள்ளது.
இது தவிர, தில்லி-என்சிஆா், மும்பை உள்ளிட்ட மேலும் நான்கு நகரங்களில் பிரத்யேக விற்பனையகங்களைத் திறக்கவிருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தனது புத்தம் புதிய அறிமுகமான ஐ-போன் 16 மற்றும் 16 ப்ரோ ரக அறிதிறன் பேசிகளின் விற்பனையை ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் கடந்த மாதம் 20-ஆம் தேதி தொடங்கியது.
அவற்றில் ஐ-போன் 16 ப்ரோ ரூ.1,19,900-லிருந்தும் ஐ-போன் ப்ரோ மேக்ஸ் ரூ.1,44,900-லிருந்தும் கிடைக்கிறது.இந்தியச் சந்தையில் முந்தைய ரக ஐ-போன்களைவிட குறைவான விலையில் புதிய ரகத்தை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது இதுவே முதல்முறை.