Monday, October 21, 2024

காஸாவில் மசூதி மீது இஸ்ரேல் தாக்குதல் – 21 பேர் பலி!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

காஸாவில் இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்திருந்த மசூதி மீது இஸ்ரேல் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 21 பேர் உயிரிழந்திருப்பதாக காஸா குடிமக்கள் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.

மத்திய டேய்ர் அல்-பாலாவில் உள்ள மசூதி வளாகத்தில் அமைந்துள்ள நிவாரண முகாம் மீது இஸ்ரேல் விமானப்படை நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.

அந்த மசூதியில் இருந்து, ஹமாஸ் ஆயுதப்படையினர் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டதையடுத்து, அவர்களை குறிவைத்தே இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில், மசூதியில் தஞ்சமடைந்திருந்த பலர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் சிலருக்கு பலத்த கயம் ஏற்பட்டுள்ளதகவும், இதன் காரணமாக, உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

You may also like

© RajTamil Network – 2024