2
கடலூர்: வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.
வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளாரின் 202-வது அவதார தின விழா வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, காலை 5 மணி முதல் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்பட்டது.