Monday, October 14, 2024

பழனி கோயிலில் ரோப் கார் சேவை இன்றுமுதல் 40 நாள்களுக்கு நிறுத்தம்!

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

பழனி மலைக் கோயிலுக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள கம்பிவட ஊர்தி (ரோப்காா்) சேவை வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக இன்றுமுதல்(அக். 7) 40 நாள்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் படிவழிப் பாதை, யானைப் பாதை, மின்இழுவை ரயில், கம்பிவட ஊர்தி ஆகியவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர்.

2 நிமிடங்களில் மலைக் கோயிலின் உச்சியை அடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கம்பிவட ஊர்திக்கு பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புள்ளது.

இதையும் படிக்க: மேகாலயத்தில் வெள்ளம், நிலச்சரிவு: 10 போ் உயிரிழப்பு

இந்த நிலையில், வருடத்தில் ஒரு மாதம் பராமரிப்புப் பணிகளுக்காக ரோப் கார் சேவை நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி, வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக இன்றுமுதல்(அக். 7) 40 நாள்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, பழனி மலைக் கோயில் அடிவாரத்தில் பக்தர்கள் வசதிக்காக தகவல் மையம், முதலுதவி மையம் நேற்று(அக். 6) திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024