Sunday, October 20, 2024

முரசொலி செல்வம் மறைவு: கண்ணீர்விட்டு அழுத முதல்வர்!

by rajtamil
Published: Updated: 0 comment 3 views
A+A-
Reset

சென்னை கோபாலபுர இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள முரசொலி செல்வம் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மருமகன் முரசொலி செல்வம்(வயது 84) வியாழக்கிழமை அதிகாலை காலமானார்.

பெங்களூரு மருத்துவமனையில் இருந்து, சென்னை கோபாலபுரத்திற்கு கொண்டு வரப்பட்ட முரசொலி செல்வத்தின் உடல், கட்சித் தொண்டர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோபாலபுர இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள முரசொலி செல்வம் உடலைப் பார்த்து முதல்வர் ஸ்டாலின் கண்ணீர் விட்டு அழுது அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள், கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிக்க: முரசொலி செல்வம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் தெரிவித்து இருந்தார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024