4
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழகிழக்கு பருவமழையையொட்டி, தமிழ்நாட்டில் இன்று மூன்று மாவட்டங்களில் மிக கனமழையும், 16 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.