Sunday, October 20, 2024

ஏற்றத்துடன் முடிந்த பங்குச் சந்தை: ஐடி துறை பங்குகள் உயர்வு!

by rajtamil
Published: Updated: 0 comment 3 views
A+A-
Reset

வர்த்தக நேர முடிவில் பங்குச் சந்தை வணிகம் ஏற்றத்துடன் முடிந்தது. ஐடி மற்றும் பார்மா துறை பங்குகள் ஏற்றம் கண்டன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 144.30 புள்ளிகள் உயர்ந்து 81,611.41 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.18% உயர்வாகும்.

தேசிய பங்குச் சந்தை குறியீட்டி எண் நிஃப்டி 16.50 புள்ளிகள் உயர்ந்து 24,998.45 புள்ளிகளாக வணிகம் நிறைவடைந்தது. மொத்த வணிகத்தில் இது 0.066% உயர்வாகும்.

வணிக நேரத் தொடக்கத்தின்போது 535.74 புள்ளிகள் சரிந்து 81,538.94 என்ற நிலையில் சென்செக்ஸ் இருந்தது. எனினும் வணிக நேர மத்தியில் 82,002.84 புள்ளிகள் வரை உயர்ந்தது. இது இந்த நாளின் அதிகபட்ச உயர்வாகும். வணிக நேர முடிவில் 144 புள்ளிகள் உயர்ந்து 81,611 புள்ளிகளாக நிலைப்பெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 16 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. எஞ்சிய 14 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் இருந்தன.

அதிகபட்சமாக கோட்டாக் வங்கியின் பங்குகள் 4.19% வரை உயர்ந்திருந்தன. இதற்கு அடுத்தபடியாக எச்டிஎஃப்சி வங்கி 1.80%, மாருதி சுசூகி 1.44%, பவர் கிரிட் 1.40%, எம்&எம் 1.31%, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் 1.30%, ஆக்சிஸ் வங்கி 1.21%, இந்தஸ்இந்த் வங்கி 1.11%, என்டிபிசி 1.02% உயர்ந்திருந்தன.

இதேபோன்று டெக் மஹிந்திரா -2.36%, சன் பார்மா -2.24%, இன்ஃபோசிஸ் -1.73%, டைட்டன் கம்பெனி -1.33%, டாடா மோட்டார்ஸ் -1.14%, எல்&டி -0.77%, ஏசியன் பெயின்ட்ஸ் -0.65%, டிசிஎஸ் -0.61%, ரிலையன்ஸ் -0.26% சரிந்தன.

வணிக நேர தொடக்கத்தில் 25,067.05 புள்ளிகளாக நிஃப்டி இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து 25,134.05 எண்ர இன்றைய உச்சத்தை எட்டியது. இதேபோன்று அதிகபட்சமாக 24,979.40 புள்ளிகள் வரை சரிந்தது.

நிஃப்டி பட்டியலிலுள்ள 50 தரப் பங்குகளில் அதிகபட்சமாக ஏபிபி பவர் நிறுவனத்தின் பங்குகள் 10.20% உயர்ந்திருந்தது. இதனைத் தொடர்ந்து டிபி ரியாலிடி 9.91%, மாஸகான் 8.36%, ராஷ்ட்ரியா கெமிக்கல் 6.82%, குஜராத் ஃபுளூரோகெமிக்கல் 6.76%, டாடா டெலிசர்வீசஸ் 5.77%, டாடா இன்வெஸ்மென்ட் 5.72% உயர்வுடன் காணப்பட்டன.

உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை 1.37% உயர்ந்தது. ஒரு பேரல் 77.63 அமெரிக்க டாலர்களாக விற்பனையானது.

ஆசிய பங்குச் சந்தையில் உள்ள டோக்கியோ, ஹாங் காங், ஷாங்காய், சியோல் ஆகிய பங்குச் சந்தைகளும் ஏற்றம் கண்டன.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024