அசாம் சிறையில் 5 விசாரணைக் கைதிகள் தப்பியோட்டம்!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

அசாம் மாநிலம் மோரிகான் மாவட்ட சிறையிலிருந்து விசாரணைக் கைதிகள் ஐந்து பேர் தப்பிச் சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோரிகான் மற்றும் சோனித்பூர் மாவட்டங்களில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 5 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அசாம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ஐந்து பேரும் இன்று காலை தப்பியுள்ளதாக போலீஸார் தகவல் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி கூறுகையில்,

கைதிகள் 5 பேரும் அடைக்கப்பட்டிருந்த அறையின் இருத்மபு கம்பிகளை உடைத்து வெளியேறியுள்ளனர். பின்னர் படுக்கை விரிப்புகள், போர்வைகளைக் கயிறாகத் திரித்து அதன்மூலம் 29 அடி உயரச் சுவரில் ஏறி குதித்துள்ளனர். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 5 பேரையும் கைது செய்ய தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024