1
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே நடந்த ரயில் விபத்தில் சிக்கியுள்ளவர்களுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் – பயணிகள் ரயில் மோதி விபத்து நேரிட்டது. மைசூரு – தர்பங்கா பயணிகள் விரைவு ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதில் இந்த விபத்து நேரிட்டது.
தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்புறத்தில் வேகமாக மோதியதில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு 2 பெட்டிகள் தீப்பற்றின.
இதையும் படிக்க: கவரப்பேட்டை ரயில் விபத்தின் பதறவைக்கும் காட்சிகள்!
இந்த விபத்தில் சிக்கியவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விபத்து தொடர்பான விவரங்களுக்கு கீழ்க்காணும் உதவி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
044-25354151
044-24354995
044-25330952
044-25330953
044-25354995