Saturday, October 19, 2024

கவரப்பேட்டை ரயில் விபத்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன்: முதல்வர்

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

கவரப்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை இரவு விபத்துக்குள்ளான மைசூரு – தர்பங்கா பயணிகள் விரைவு ரயிலில்(12578) தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தி, ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மீட்புப் பணிகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாரக அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

தகவல் கிடைக்கப்பெற்றவுடன், அமைச்சர் சா.மு. நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளையும் விபத்து நடந்த இடத்திற்குச் செல்ல உத்தரவிட்டேன்.

மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் அரசு துரிதமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக

இதையும் படிக்க |மோடி அரசு விழித்துக்கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் பலி கொடுக்க வேண்டும்?: ராகுல்

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். மற்ற பயணிகளுக்குத் தேவையான உணவு, அவர்கள் ஊர் திரும்புவதற்கான

பயண வசதிகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதற்கெனத் தனியே ஒரு குழு இயங்கிக் கொண்டிருக்கிறது.

விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024