திருச்சி: கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து ராகுல் காந்தியின் கருத்து குழந்தைத்தனமானது, 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ரயில் விபத்துகள் குறைந்துள்ளது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார். கோயிலில் உள்ள பெருமாள் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, தாயார் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளில் அவர் சாமி தரிசனம் செய்தார்.
இதையும் படிக்க |மோடி அரசு விழித்துக்கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் பலி கொடுக்க வேண்டும்?: ராகுல்
பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் விபத்து, திருச்சி விமான தொழில்நுட்ப கோளாறு ஆகியவை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்த ராகுல் காந்தியின் கருத்து குழந்தைத்தனமானது. அங்கு நடந்தது விபத்து சிறு விபத்து தான். பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் ரயில் விபத்துகள் குறைந்துள்ளது. எனவே இதில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என அவர் கூறினார்.