மும்பை-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு அதிகாலை 4:00 மணியளவில் மிரட்டல் செய்தி ஒன்று திங்கள்கிழமை வந்திருக்கிறது.
சென்னையில் அக்.16, 17-ல் 250 மி.மீ. மழை பெய்யும்?
அதில், மும்பை-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலை டைமர் வெடிகுண்டு மூலம் வெடிக்கச் செய்யப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து ஜல்கான் நிலையத்தில் மும்பை-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் (12809) நிறுத்தி சோதனை செய்யப்பட்டது.
அதில் சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் கிடைக்கவில்லை.
இதன் பின்னர் ரயில் தனது பயணத்தைத் தொடர்ந்தது. இதற்கிடையில், வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக பள்ளிகள், விமான நிலையங்களுக்கு கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் தொடா்ந்து அரங்கேறி வருகிறது.