மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 6,445 கன அடியிலிருந்து வினாடிக்கு 17,596 கன அடியாக அதிகரித்துள்ளது.

டெல்டா பாசன பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கனஅடியிலிருந்து வினாடிக்கு 7,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… நடுவானில் தில்லி திரும்பியது!

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89.26 அடியிலிருந்து 89.92 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 52.55 டிஎம்சியக உள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024