ரஜினியின் ‘வேட்டையன்’ 2 நாட்களில் ரூ.100 கோடி வசூல்!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘வேட்டையன்’ திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருந்த வேட்டையன் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ஜெய் பீம் படத்திற்குப் பிறகு இயக்குநர் ஞானவேல் இயக்கியிருந்த இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது.

அதே சமயம் 33 வருடங்களுக்கு முன்பாக ஹம் என்ற இந்தி படத்தில் இணைந்திருந்த ரஜினி மற்றும் அமிதாப் கூட்டணி, மீண்டும் இணைந்துள்ளதும் படத்தின் மற்றொரு எதிர்பார்ப்புக்கு காரணம். இதில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்தும், என்கவுன்டரை எதிர்க்கும் வழக்கறிஞராக அமிதாப் பச்சனும் நடித்துள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களான இவர்கள் இருவரும் நடித்திருப்பதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அடுத்தது பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் கல்வி முறையில் உள்ள ஓட்டைகள் குறித்தும் போலி என்கவுண்டர் குறித்தும் பேசுகிறது.

இந்தப் படம் ஆயுத பூஜை விடுமுறை தினங்களை முன்னிட்டு கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் வெளியான முதல் நாள் உலக அளவில் ரூ.65 கோடியை வசூலித்ததாக கூறப்பட்டது. 2 நாட்களையும் சேர்த்து இத்திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விடுமுறை நாள் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

Original Article

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024