1
சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை புறப்படவிருந்த 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகின்றது.
நாளையும் சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் தங்களின் பயணங்களை ரத்து செய்து வருகின்றனர்.
இதையும் படிக்க : வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது!
இந்த நிலையில், போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் சென்னை விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, அந்தமான், தில்லி, மஸ்கட் செல்லக் கூடிய 8 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.