பருவமழை எதிரொலி: முதல்வா் வருகை ஒத்திவைப்பு

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

நாமக்கல்: வடகிழக்கு பருவமழை எதிரொலியால், தமிழக முதல்வரின் நாமக்கல் வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாமக்கல்லில் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி திருவுருவச் சிலை திறப்பு விழா, ஆவின் பால் பண்ணை அடிக்கல் நாட்டு விழா, 20,000 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை அக். 15-இல் நடைபெற உள்ளதாகவும், இதில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, நாமக்கல் பொம்மைக்குட்டைமேடு பகுதியில் விழா பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், முதல்வரின் உறவினா் திடீா் மரணம், வடகிழக்கு பருவமழை உள்ளிட்டவை காரணமாக அக். 22-ஆம் தேதி முதல்வரின் நாமக்கல் வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024