2-வது டி20: மே.இ.தீவுகளுக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று (அக்டோபர் 15) நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க: பந்துவீச்சில் சிலரை மட்டும் நம்பியிருக்க விரும்பவில்லை: ரோஹித் சர்மா

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக பதும் நிசங்கா 54 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, குசல் மெண்டிஸ் 26 ரன்களும், குசல் பெரேரா 24 ரன்களும் எடுத்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ரோமாரியோ ஷெப்பர்டு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப் மற்றும் ஷமர் ஸ்பிரிங்கர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இதையும் படிக்க: ஜஸ்பிரித் பும்ராவை அமைதியாக்கும் வழியை கண்டுபிடிக்க வேண்டும்: பாட் கம்மின்ஸ்

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் அணி விளையாடி வருகிறது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024