பிகர் மாநிலம் சரண் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்து ஒருவர் பலியாகியுள்ளார், இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,
சரண் மாவட்டத்தின் முஷ்ராக் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட இப்ராஹிம்பூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கள்ளச்சாராயம் உயிரிழப்பு குறித்து அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து வருகின்றனர். மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை மேற்கொண்டு வருவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிகாரில் மது விற்பனை கடந்த 2016ல் நிதிஷ்குமார் அரசு தடை விதித்தது. மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பிகார் அரசு சமீபத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.