நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் வெடித்து விபத்து: 94 பேர் பலி

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வெளியேறிய பெட்ரோலை அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் சேகரிக்கச் சென்றபோது வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 94 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் அதிகமானோர் படுயாகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர், நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது நிலைத்தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

பெட்ரோல் எடுக்கச்சென்றபோது விபரீதம்.

நள்ளிரவு ஏற்பட்ட இந்த விபத்தின்போது, டேங்கர் லாரியில் இருந்த பெட்ரோல் கசிந்து வெளியேறியுள்ளது. அருகிலிருந்த மக்கள் டேங்கர் லாரியில் கசிந்த பெட்ரோலை சேகரித்துள்ளனர். அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடியதால், டேங்கர் லாரி தீப் பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் 94 பேர் இதுவரை உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 50க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

சரக்கு ரயில் போக்குவரத்து நைஜீரியாவில் மிகப்பெரிய தோல்வியடைந்ததால், சாலைமார்க்கமாக டேங்கர் லாரிகளில் எரிபொருள்கள் எடுத்துச்செல்லப்படுகின்றன. இதனால், விபத்துகள் அடிக்கடி ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | இஸ்ரேல் தாக்குதல்: தெற்கு லெபனானில் 15 பேர் பலி!

2020 ஆம் ஆண்டில் மட்டும் 1531 டேங்கர் லாரி விபத்துகள் நேரிட்டுள்ளன. இதில் 535 விபத்துகளில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 1,142 விபத்துகளில் படுகாயங்களுடன் தப்பியுள்ளனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024