ரயில் டிக்கெட் முன்பதிவுக் காலம் குறைப்பு!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால அளவை 120 நாள்களில் இருந்து 60 நாள்களாகக் குறைத்து ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நீண்ட தொலைவு செல்லும் அதிவிரைவு ரயில்களில் பயணம் செய்வதற்கு 120 நாள்களுக்கு முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி இருக்கிறது.

இந்நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவு கால அளவை 60 நாள்களாகக் குறைத்து ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது, பயணம் செய்யும் நாளுக்கு 60 நாள்கள் முன்னதாக டிக்கெட் முன்பதிவு தொடங்கும். வருகிற நவம்பர் 1-ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.

மேலும், இந்த 60 நாள்களுக்குள் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை வழக்கம்போல ரத்து செய்துகொள்ளலாம்.

இதையும் படிக்க | விடியோ அழைப்பு மூலமாக டிஜிட்டல் அரெஸ்ட்! புது ஸ்டைலில் ஆன்லைன் பண மோசடி!

தாஜ் எக்ஸ்பிரஸ், கோமதி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பகல் நேரங்களில் இயங்கும் அதி விரைவு ரயில்களுக்கான முன்பதிவில் எவ்வித மாற்றமுமில்லை.

மேலும், அக். 31 வரை செய்யப்பட்ட ரயில் டிக்கெட் முன்பதிவுகளிலும் எந்த மாற்றமும் இல்லை.

வெளிநாட்டுப் பயணிகளுக்கு முன்பதிவு காலம் 365 நாள்கள் என்றிருக்கும் நிலையில் அதுவே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ரேஷன் கார்டில் பெயர் நீக்கமா? இனி இதுதான் நடைமுறை!

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024