உத்தரப் பிரதேசத்தில் சிறார் ஆபாச விடியோக்களை விற்று வந்த சிறுவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் கோரக்பூரில் 17 வயதான சிறுவர் ஒருவர், ராஜ் என்பவரிடம் இருந்து ஆபாச விடியோக்களை பெற்று, அவற்றை விலைக்கு விற்று வந்துள்ளார். ராஜிடமிருந்து டெலிகிராமில் செயலி மூலம் ஆபாச விடியோக்களை பெற்று, அதனை ஒரு விடியோவுக்கு ரூ. 3000 முதல் ரூ. 20000 வரையில் கட்டணமாக வசூலித்து வந்துள்ளார்.
வசூலில் 30 சதவிகிதத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, மீதப் பணத்தை ராஜூவுக்கு அளித்து வந்துள்ளார். இதுதொடர்பாக, கோரக்பூர் சைபர் காவல் துறைக்கு ஒரு தன்னார்வ அமைப்பிடமிருந்து தகவல் கிடைத்ததையடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதையும் படிக்க: சல்மான் கான் கொலை முயற்சி வழக்கு: குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்கள்!
இதனைத் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஆபாச விடியோக்களை விற்று வந்த சிறுவனை கைது செய்தனர். சிறுவனிடமிருந்த கைப்பேசியை பறிமுதல் செய்ததில், அவரிடம் சுமார் 4000 சிறார் ஆபாச விடியோக்கள் இருப்பது தெரிய வந்தது.
இந்த புகார் தொடர்பாக, சிறுவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், இந்த வலையமைப்பில் தொடர்புடைய மற்றவர்களும் தேடப்பட்டு வருவதாக மூத்த காவல் கண்காணிப்பாளர் கௌரவ் குரோவர் தெரிவித்தார்.