Saturday, October 19, 2024

இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.

சென்னை,

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (18.10.2024) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தின் 31 மாவட்டங்களில் இரவு 10 மணி வரம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு, சிவகங்கை, புதுக்கோட்டை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திண்டுக்கல், தேனி, மதுரை, தேனி, தென்காசி, நீலகிரி, கோவை, குமரி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாமக்கல் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024