5
மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. துபையில் உள்ள துபை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து முதலில் பேட் செய்கிறது. அரையிறுதியில் விளையாடிய அதே பிளேயிங் லெவனுடன் இரு அணிகளும் களம் காண்கின்றன. பிளேயிங் லெவனில் மாற்றம் இல்லை.
இரு அணிகளும் உலகக் கோப்பையை வெல்லாத அணிகள் என்பதால் எந்த அணி கோப்பையை முதல் முறையாக வெல்லப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.