தீபாவளி சிறப்புப் பேருந்துகள்: அமைச்சர் ஆலோசனை

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

பண்டிகை காலங்களில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பிற ஊர்களுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்குவது வழக்கம்.

அந்தவகையில், நடப்பாண்டு தீபாவளி பண்டிகை வருகிற அக். 31 ஆம் தேதி வருகிறது.

இதையும் படிக்க | ரயில்வேயில் மாதம் ஒருமுறை மட்டுமே துவைக்கப்படும் கம்பளிகள்!

இதையொட்டி, தமிழகம் முழுவதும் 16,500 சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சென்னையில் இருந்து மட்டும் 10,500 சிறப்புப் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தலைமையில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

ஆலோசனைக்குப் பின்னர் அதிகாரப்பூர்வ தகவல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024