3
டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை தமிழக அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அடுத்த வாரம் வியாழக்கிழமை(அக்.31) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழக அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவிகிதம் போனஸ் வழங்கப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : ஒரு வெடிகுண்டு மிரட்டல்! விமான நிறுவனங்களுக்கு ரூ. 3 கோடி நஷ்டம்!
இதன்மூலம், டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.16,800 வரை போனஸ் கிடைக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவிகிதம் போனஸ் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.