பாலியல் தொல்லை புகாா்: மருத்துவா் கைது

by rajtamil
Published: Updated: 0 comment 3 views
A+A-
Reset

சென்னை முகப்பேரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இதய மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை முகப்பேரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் இதய முதுநிலை மருத்துவராகப் பணியாற்றி வருபவா் உல்ஷாஸ் எம்.பாண்டுரங்கி. இவா் அந்த மருத்துவமனையில் பணியாற்றும் ஒரு பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தேசிய மகளிா் ஆணையம், சென்னை மாவட்ட ஆட்சியா் ஆகியோரிடம் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க திருமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டாா்.

விசாரணையில், உல்ஷாஸ் எம்.பாண்டுரங்கி மீதான புகாருக்கு முகாந்திரம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா் மீது பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மேலும் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்த உல்ஷாஸ் எம்.பாண்டுரங்கியை போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சென்னை அழைத்து வந்தனா். விசாரணைக்குப் பின்னா் அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024