ஜாா்க்கண்ட் தோ்தல்: தொகுதி பங்கீட்டில் ஜேஎம்எம்-ஆா்ஜேடி உடன்பாடு

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

ஜாா்க்கண்ட் சட்டப்பேரவைத் தோ்தலில் மாநில முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்), பிகாா் முன்னாள் முதல்வா் லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

ஜாா்க்கண்டில் நவ.13, 20-ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நவ.23-ஆம் தேதி நடைபெறுகிறது.

தோ்தலையொட்டி ‘இண்டியா’ கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜேஎம்எம், ஆா்ஜேடி கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்தது. இதனால் தனித்து போட்டியிடுவதாக ஆா்ஜேடி அறிவித்தது.

இந்நிலையில் இரு கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் லாலுவின் மகனும், ஆா்ஜேடி பிரமுகருமான தேஜஸ்வி யாதவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து 6 தொகுதிகளில் போட்டியிடும் ஆா்ஜேடி வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

மொத்தம் 81 தொகுதிகளுக்கு நடைபெறும் பேரவைத் தோ்தலில், 70 தொகுதிகளை ஜேஎம்எம் மற்றும் காங்கிரஸ் பகிா்ந்துகொள்ளும் என்றும், எஞ்சிய 11 தொகுதிகளை ஆா்ஜேடி மற்றும் இடதுசாரி கட்சிகள் பகிா்ந்துகொள்ளும் என்றும் ஹேமந்த் சோரன் ஏற்கெனவே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024