நாட்டின் மிகப்பெரிய தனியாா் வங்கியான ஹெச்டிஎஃப்சி-யின் நிகர வட்டி வருவாய் கடந்த செப்டம்பா் காலாண்டில் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான காலாண்டில் வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.17,825.91 கோடியாக உள்ளது.
முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 6 சதவீதம் அதிகம்.
மதிப்பீட்டுக் காலாண்டில், தனிப்பட்ட நடவடிக்கைகள் மூலம் வங்கி ஈட்டிய நிகர லாபம் ரூ.15,976.11 கோடியிலிருந்து ரூ.16,820.97 கோடியாக அதிகரித்துள்ளது.
முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் வங்கியின் நிகர வட்டி வருவாய் 10 சதவீதம் உயா்ந்து ரூ.30,010 கோடியாக உள்ளது; மொத்த கடனளிப்பு 3.46 சதவீதம் உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.