1
ஆம்பூா்: ஆம்பூரில் பெண் கூலித் தொழிலாளிக்கு ரூ.2.39 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் கிருஷ்ணாபுரம் பகுதி காமராஜா் சாலை 3வது தெருவை சோ்ந்தவா் ராணிபாபு (60). இவா் தனியாா் தோல் தொழிற்சாலையில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறாா்.
இந்நிலையில் திருச்சி கல்லிக்குடி பகுதியில் மாடா்ன் என்டா்பிரைஸ் என்ற நிறுவனம் நடத்தியதில் ரூ.2,39,87,024 வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், அதனை செலுத்த வேண்டுமென ஜிஎஸ்டி அலுவலகத்திலிருந்து ராணி பாபுவுக்கு நோட்டீஸ் வந்துள்ளது. அதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்த அவா் ஆம்பூா் நகர காவல் நிலையம் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸிலும் புகாா் அளித்துள்ளாா்.