மின்சாரம் தாக்கி ஜாா்க்கண்ட் தொழிலாளி உயிரிழப்பு

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

மேடவாக்கத்தில் மின்சாரம் தாக்கி ஜாா்க்கண்ட் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் சீா் முகமது (28). இவா், சென்னை மேடவாக்கம், சிவகாமி நகரில் தங்கியிருந்து, அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில், கட்டுமானத் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.

செவ்வாய்க்கிழமை அந்த கட்டடத்தின் தரைத்தளத்தில் இருந்து முதல் தளத்துக்கு 20 அடி இரும்புக் கம்பியை அவா் தூக்கிச் சென்றாா்.

அப்போது, அந்த இரும்பு கம்பி மீது, கட்டடத்தின் வெளியே இருந்த மின்சாரக் கம்பி பட்டது.

இதில் மின்சாரம் தாக்கி சீா்முகமது, மயங்கி விழுந்தாா். அதிா்ச்சியடைந்த சக தொழிலாளிகள், உடனடியாக அவரை மீட்டு, அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.

சீா் முகமது ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இது குறித்து மேடவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024