2
பெங்களூருவில் பெய்த கனமழையால் சுமார் 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
பெங்களூருவின் தெற்கு பகுதிகளில் புதன்கிழமை (அக். 23) மாலை 4 மணியளவில் பலத்த மழை பெய்தது. இதன் விளைவாக, எலச்செனஹள்ளியில் உள்ள ராமகிருஷ்ண நகர் மற்றும் ஃபயாஜாபாத் சாலைகளில் தண்ணீர் பெருகி சுமார் 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
ஒவ்வொரு 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை பெய்யும் கனமழையால் மக்களின் இயல்பு பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
மழைக்காலங்களில், இப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதாகவும், தண்ணீரால் பரவும் நோய்களால் குழந்தைகள் நோய்வாய்ப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 12 ஆண்டுகளாக இந்தப் பிரச்னை தீர்க்கப்படாமல் இருப்பதாகவும் கூறினர்.
இதையும் படிக்க:இஸ்ரேல் மீது டிரோன் தாக்குதல் நடத்திய இராக்!