Sunday, October 27, 2024

தீபாவளியன்று கோயம்பேடு மார்க்கெட் செயல்படும்! பதிலாக…

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

சென்னை கோயம்பேடு வணிக வளாகம் தீபாவளியன்று(அக்.31) செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை வருகிற அக். 31 ஆம் தேதி(வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து அன்றைய தினம் கோயம்பேடு வணிக வளாகம் வழக்கம்போல் செயல்படும் என்றும் அதற்குப் பதிலாக நவம்பர் 1 ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) கோயம்பேடு வணிக வளாகம் முழுமையாக மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | பிஞ்சுக் குழந்தைகளிடையே அதிகரித்து வரும் சுவாசத் தொற்று! தீர்வு என்ன?

கோயம்பேடு சிறு மொத்த காய்கறி வியாபார நலச் சங்கத் தலைவர் முத்துக்குமார் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

நவ. 2 ஆம் தேதி முதல் மார்க்கெட் வழக்கம்போல செயல்படும் என்றும் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024