3
புதுச்சேரி: ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.செல்வகணபதி 3 மாதம் அவகாசம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.
புதுச்சேரி பாஜக தலைவரும் புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்.செல்வகணபதி எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அதிகாரிகள் முன் வெள்ளிக்கிழமை(அக் 25) ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இதையும் படிக்க |கன்னியாகுமரியில் பலத்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
இந்த நிலையில், தனது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து 3 மாதம் அவகாசம் வேண்டும் என செல்வகணபதி கடிதம் எழுதியுள்ளார்.