Sunday, October 27, 2024

மும்பையில் ரூ. 138 கோடி நகைகள் பறிமுதல்! போலீஸார் விசாரணை!

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

மகாராஷ்டிரத்தில் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில், ரூ. 138 கோடியிலான தங்க நகைகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் நவம்பர் மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள மாநிலம் முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணமாகவோ பொருளாகவோ அரசியல் கட்சியினர் அளிக்கப்படுவதை தடுக்கும் வகையில், சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் பணியாற்றுகின்றனர்.

இந்த நிலையில், சஹாகர் நகரில் பத்மாவதி வளாகத்துக்கு அருகே மினிலாரி நடத்தப்பட்ட சோதனையில் பெட்டிகளில் வெள்ளைநிறப் பைகளில், சுமார் ரூ. 138 கோடி மதிப்பிலான தங்க நகைகள் இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, மினிலாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதையும் படிக்க: மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை! இந்த முறை உதயநிதி விழாவில்…(விடியோ)

விசாரணையில், மும்பையில் இருந்து புணே செல்லவிருப்பதாகவும், தன்னிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பதாகவும் ஓட்டுநர் தெரிவித்தார். இருப்பினும், இதனைச் சரிபார்ப்பதற்காக வருமான வரித்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த அக். 21 ஆம் தேதியில் மும்பையிலிருந்து கோலாப்பூருக்கு செல்லும் புணே சதாரா நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் காரில் சென்றவர்களிடம் இருந்து ரூ. 5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024