2
அடுத்த 3 மணி நேரத்துக்கு நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று நல்ல மழை பெய்தது. தொடர்ந்து இன்றும் பல பகுதிகளில் பெய்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (பகல் 1 மணி வரை) நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.