பிரதமர் மோடியுடன் ஹரியாணா, மிசோரம் முதல்வர்கள் சந்திப்பு

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

தலைநகர் தில்லியில் பிரதமர் மோடியை ஹரியாணா, மிசோரம் முதல்வர்கள் இன்று சந்தித்தனர்.

பிரதமர் அலுவலகத்தின் எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: ஹரியாணா முதல்வர் நயப் சிங் சைனி, பிரதமர் மோடியை சந்தித்தார்.

இதேபோல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், மிசோரம் முதல்வர் லால் துஹோமா பிரதமர் மோடியை சந்தித்தார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இருப்பினும் சந்திப்புக்கான விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

கர்நாடகத்தில் பருவமழைக்கு 25 பேர் பலி: சித்தராமையா

ஹரியாணா மாநிலத்தில் அக்.5-ம் தேதி நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றுத் தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது.

காங்கிரஸ் 37 தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சியாக உள்ளது.

இந்த தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024