இங்கிலாந்து உடனான 3ஆவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என வென்றது.
சஜித் கான் தொடர் நாயகனாகவும் சௌத் ஷகீல் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்கள்.
223 பந்துகளில் 134 ரன்கள் எடுத்தார் துணைக் கேப்டன் சௌத் ஷகீல். இந்த சதத்தினை சிறப்பான இன்னிங்ஸாக பாராட்டி பேசியுள்ளார் ஷான் மசூத்.
இதையும் படிக்க:2 போட்டிகளில் 39 விக்கெட்டுகள்..! யார் இந்த சுழல் பந்துவீச்சாளர்கள்?
பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் முதல்முறையாக தொடரை வென்றுள்ளார். பாகிஸ்தானுக்கும் இது முக்கியமான வெற்றி. 2021க்குப் பிறகு முதல்முறையாக சொந்த மண்ணில் தொடரை கைப்பற்றியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றிக்குப் பின் பாகிஸ்தான் கேப்டன் பேசியதாவது:
நீண்ட நாள்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த வெற்றி எனக்கும் அணிக்கும் பயிற்சியாளர்களுக்கும் மிக முக்கியமானது.
இதையும் படிக்க:12 ஆண்டுகள் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி; டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்த நியூசிலாந்து!
அணியினர் திடமான கதாபாத்திரம் பாராட்டத்தக்கது. நான் பார்த்ததிலேயே சௌத் ஷகீல் அடித்ததுதான் சிறந்த சதம் என்பேன். பவுண்டரிகள் இல்லாமல் 70 சிங்கள்ஸ் என்பது அபாரமான ஒன்று. சஜித், நோமன் குறித்து என்ன சொல்வது அற்புதமான வீரர்கள்.
பேட்டிங்கில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. சௌத் ஷகீல், சல்மான் அணித் தலைவர்களாக நல்ல முன்னேற்றம் அடைகிறார்கள். இதுவரை எங்களுடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.
இங்கிலாந்துக்கும் நன்றி. எப்போதும் இரு அணிகளுக்கும் நல்ல போட்டி இருக்கிறது. நாங்கள் இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.