கான்பூரில் பெண்ணைக் கொன்று புதைத்த ஜிம் பயிற்சியாளர் கைது

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

கான்பூரில் பெண்ணைக் கொன்று உடலை மாவட்ட ஆட்சியர் வீட்டின் அருகே புதைத்த ஜிம் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் கடந்த 24ஆம் தேதி பெண் ஒருவருக்கும், ஜிம் பயிற்சியாளருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அந்த பெண்ணைக் கொன்ற ஜிம் பயிற்சியாளர், உடலை கான்பூர் மாவட்ட ஆட்சியர் வீட்டின் அருகே புதைத்ததாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் ஜிம் பயிற்சியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, கொலை செய்யப்பட்ட பெண் குற்றம் சாட்டப்பட்டவரின் ஜிம்மிற்கு சென்று பயிற்சி பெற்று வந்துள்ளார்.

தவெக மாநாட்டிற்குச் சென்ற இளைஞர் விபத்தில் பலி!

இருவருக்கும் ஏதோ ஒரு விவகாரத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதத்தில் அந்த பெண்ணைக் கொன்று அவரது உடலை, ஜிம் பயிற்சியாளர் புதைத்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கை தவறாக வழிநடத்த முயன்றதாகவும், கடுமையான விசாரணையின்போது உண்மை வெளி வந்ததாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024