0
தீபாவளி பண்டிகை காலத்தில் விடுப்பு எடுக்காமல் ஓட்டுநா், நடத்துநா் பணிக்கு வருமாறு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.
பொதுமக்கள் நலன் கருதி திங்கள்கிழமை (அக்.28) முதல் நவ.3 வரை பேருந்து நடத்துநா், ஓட்டுநா் விடுப்பு எடுப்பதைத் தவிா்த்து குறித்த நேரத்தில் தவறாது பணிக்கு வந்தும் தேவைக்கேற்ப கூடுதல் பணி செய்தும் சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து பேருந்துகளையும் நடையிழப்பின்றி இயக்க ஒத்துழைக்க வேண்டும் என்று போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா்களுக்கு துறை சாா்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.