Friday, September 20, 2024

‘பிரதமர் மோடி இனி தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்க முடியாது’ – ஆ.ராசா

by rajtamil
0 comment 34 views
A+A-
Reset

பிரதமர் மோடியால் இனி தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்க முடியாது என தி.மு.க. எம்.பி. ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

நீலகிரி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆ.ராசா, வெற்றி பெற்று 3-வது முறை எம்.பி.யாக தேர்வாகியுள்ளார். இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நீலகிரி தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து ஆர்.ராசா பேசி வருகிறார். அந்த வகையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது;-

"நாற்பதுக்கு நாற்பது என்ற இலக்கை தமிழ்நாட்டு மக்கள் சாத்தியப்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வெற்றி இது. பிரதமர் மோடியால் இனி தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்க முடியாது. சமஸ்கிருதத்திற்கு ரூ.400 கோடி, தமிழுக்கு ரூ.3 கோடி என்று ஒதுக்க முடியாது. சீனாவையும், அமெரிக்காவையும் பார்த்து மோடி பயப்படுகிறாரோ இல்லையோ, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும், தி.மு.க.வையும் பார்த்து மோடி பயப்படுகிறார்."

இவ்வாறு ஆ.ராசா தெரிவித்தார்.

You may also like

© RajTamil Network – 2024