5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு

by rajtamil
0 comment 23 views
A+A-
Reset

5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு

தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (ஜூன் 24) முதல் ஜூன் 29-ஆம் தேதி இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதில், ஜூன் 24, 25-ஆகிய தேதிகளில் கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இந்த நிலையில் தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024