Friday, September 20, 2024

திண்டுக்கல் அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

by rajtamil
Published: Updated: 0 comment 39 views
A+A-
Reset

இறந்த நபர் நெல்லை அல்லது ஈரோட்டை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை அடுத்த பாளையம் அருகே, ரெயில்வே தண்டவாள பகுதியில் நேற்று காலை 35 வயது வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று இறந்தவரின் உடலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது அவருடைய பேண்ட் பாக்கெட்டில் ஈரோட்டில் இருந்து நெல்லை செல்வதற்கான முன்பதிவில்லாத டிக்கெட் மட்டும் இருந்தது. வேறு எந்த ஆவணங்களும் இல்லை. இதனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. அவர் நெல்லை அல்லது ஈரோட்டை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த வழியாக சென்ற ஏதோ ஒரு ரெயிலில் இருந்து அவர் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இதையடுத்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

© RajTamil Network – 2024