Saturday, September 21, 2024

கள்ளக்காதலனுடன் அடிக்கடி உல்லாசம்… மனைவியை கண்டித்த கணவர்… அடுத்து நடந்த கொடூரம்

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

மும்பை,

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் விரார் புல்பாடா பகுதியில் தனது கணவர், 2 குழந்தைகளுடன் 32 வயது பெண் வசித்து வந்தார். இந்த பெண்ணுக்கும் அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த சேகர் கதம் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்தது.

இதனால் அடிக்கடி கள்ளக்காதலியின் வீட்டிற்கு சேகர் கதம் சென்று உல்லாசமாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் சமீபத்தில் பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. இதனால் அவர் சேகர் கதம் உடனான கள்ளக்காதலை கைவிடுமாறு மனைவியை கண்டித்ததோடு, அவரோடு தகராறு செய்து உள்ளார்.

இது பற்றி அறிந்த சேகர் கதம் பெண்ணின் கணவரை மிரட்டி உள்ளார். தனது கணவரை சேகர் கதம் மிரட்டியதால் கோபமடைந்த அப்பெண் சேகர் கதத்தை கண்டித்ததோடு, அவருடனான தொடர்பை முறித்துக்கொண்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சேகர் கதம் சம்பவத்தன்று கள்ளக்காதலியின் வீட்டிற்கு சென்று அவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த வாக்குவாதம் முற்றியதில் கடும் ஆத்திரம் அடைந்த சேகர் கதம் தனது கள்ளக்காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றார்.

இது பற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பிஓடிய சேகர் கதமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024