அடுத்த 2 மணிநேரத்துக்குள் 7 மாவட்டங்களில் மழை பெய்யும்!

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

அடுத்த 2 மணிநேரத்துக்குள் 7 மாவட்டங்களில் மழை பெய்யும்!தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை(ஜூன் 28) 10 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புதமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை(ஜூன் 28) 10 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வெள்ளிக்கிழமை (ஜூன் 28) முதல் ஜூலை 3 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் ஜூன் 28 முதல் ஜூலை 1 வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜூன் 28,29-ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை அடுத்த 2 மணி நேரத்திற்குள் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அறிவிப்பின்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் காலை 10 மணிவரை லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024