Saturday, September 21, 2024

அரையிறுதி வெற்றி…ஆனந்த கண்ணீர் விட்ட ரோகித்.. கோலி செய்த செயல்

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

கயானா,

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் 57 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 47 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து, இந்திய அணியின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 103 ரன்களில் சுருண்டது.

இதன் மூலம் 10 வருடங்களுக்கு பின் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்தியா. இதனால் உணர்ச்சி வசப்பட்ட இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஆனந்த கண்ணீர் விட்டார். இதனை கண்ட விராட் கோலி, ரோகித் சர்மாவின் தோளில் தட்டிக் கொடுத்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

You may also like

© RajTamil Network – 2024