அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் பாலகிருஷ்ணரெட்டி.
கடந்த 1998 ஆம் ஆண்டு ஓசூரை அடுத்த பாகலூரில் நடைபெற்ற அதிமுக போராட்டத்தில் பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பாலகிருஷ்ணரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ணரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 108 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், 16 பேரை குற்றவாளிகள் என அறிவித்து, பாலகிருஷ்ணரெட்டிக்கு அளிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது.