Monday, September 23, 2024

பிரதமரை நேரில் சந்தித்து பேசிய ஆந்திர முதலமைச்சர்… காரணம் என்ன ?!

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

பிரதமரை நேரில் சந்தித்து பேசிய ஆந்திர முதலமைச்சர்… காரணம் என்ன ?!பிரதமரை நேரில் சந்தித்து பேசிய ஆந்திர முதலமைச்சர்... காரணம் என்ன ?!

பிரதமர் நரேந்திர மோடியை ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார்.

ஆந்திர மாநிலத்திற்கு நிதி உதவி வழங்கக் கோரி அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார். ஆந்திர மாநில அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாகச் சொல்லப்படுகிறது. துணை முதலமைச்சர் பவன் கல்யாண் இதற்காக தனது எம்.எல்.ஏ சம்பளத்தைக் கூட விட்டுக்கொடுத்தார்.

இந்நிலையில் இருநாள் பயணமாக டெல்லி சென்ற ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பிரதமரைச் சந்தித்தார். அப்போது ஆந்திராவுக்கு நிதி உதவி மற்றும் வரிச்சலுகை வழங்குவது தொடர்பாக வலியுறுத்தியதாகச் சொல்லப்படுகிறது. மத்திய அமைச்சர்களான நிதின் கட்கரி, பியூஸ் கோயல் உள்ளிட்டோரையும் அவர் சந்தித்துப் பேசினார். மத்தியில் ஆட்சியில் இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் முக்கிய கட்சியாக அங்கம் வகித்து வருகிறது.

விளம்பரம்
nw_webstory_embed
மேலும் செய்திகள்…

அதனால் ஆந்திர மாநில வளர்ச்சி தொடர்பாக சந்திரபாபு வைக்கும் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
andhra cm
,
chandrababu
,
PM Modi
,
Prime minister
,
Prime Minister Narendra Modi

You may also like

© RajTamil Network – 2024